» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின பவள விழா நடைபயணம்
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 9:18:45 PM (IST)
தூத்துக்குடியில் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தின பவள விழா நடைபயணம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் சுதந்திர தின பவள விழா நடைபயணம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இருந்து புறப்பட்டு 1ம் கேட், மட்டக்கடை, புது தெரு, கால்டுவெல் பள்ளி வழியாக இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகுட்டி, வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகர தலைவர் அருள்வளன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வெள்ளப்பட்டி ஜேசுதாசன், பெத்துராஜ் (கலைப்பிரிவு), எட்வார்ட் ராஜ், சேவியர் மிஷியர், சுரேஷ்குமார், பேரையா, தையல் மனோகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், மீனவரணி மிக்கேல் குரூஸ், மடத்தூர் தனபால் ராஜ், அபுதாஹிர், சம்சுதீன் ஏசுதாஸ் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.