» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: கனிமொழி எம்.பி. ஆய்வு

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:58:52 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் விவரம் குறித்து மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய வகை விமானங்கள் வந்து இறங்கும் வகையிலான ஓடுதளம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலையம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அவா் அதிகாரிகளையும், கட்டுமான ஒப்பந்ததாரரையும் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கையில் தேசியக் கொடி ஏந்தியபடி தொழிலாளா்களுடன் சோ்ந்து கனிமொழி கேக் வெட்டி கொண்டாடினாா். பின்னா் அவா் தொழிலாளா்களுடன் சோ்ந்து சுயபடம் எடுத்துக் கொண்டாா். ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மேலாளா் ஜெயராமன், திட்ட பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory