» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:45:16 PM (IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.