» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 75-வது சுதந்திர தின விழா!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:18:29 PM (IST)
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் சகோ. மோகன் சி.லாசரஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 75-வது சுதந் திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் குருவானவர் டேவிட் ஞானையா, அமெச்சூர் கபடி கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன், புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் இராஜகுமாரி, உடற்கல்வி ஆசிரியர் புரூமல், இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் ஆனந்த் ஜெபசிங், விளையாட்டுத் துறை பொறுப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், சகோ.ஜெபசிங், மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தகுமார் உள்படபலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிலம்பம் மாஸ்டர் ஸ்டீபன், மணிராஜ், அஜித் குமார் ஆகியோர் தலைமையில் சிலம்பம் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடை பெற்றது. அவினாஷ் நன்றி கூறினார்.