» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 75-வது சுதந்திர தின விழா!

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:18:29 PM (IST)



நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் சகோ.  மோகன் சி.லாசரஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
       
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 75-வது சுதந் திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

விழாவில் குருவானவர் டேவிட் ஞானையா, அமெச்சூர் கபடி கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன், புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் இராஜகுமாரி, உடற்கல்வி ஆசிரியர் புரூமல், இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் ஆனந்த் ஜெபசிங், விளையாட்டுத் துறை பொறுப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், சகோ.ஜெபசிங், மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தகுமார் உள்படபலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலம்பம் மாஸ்டர் ஸ்டீபன், மணிராஜ், அஜித் குமார் ஆகியோர் தலைமையில் சிலம்பம் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடை பெற்றது. அவினாஷ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory