» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் சுதந்திர தின விழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:05:21 PM (IST)
தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் 76-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ் பர்னாந்து முதலான தேசிய தலைவர்கள் சிலைகள் மற்றும் வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலை, மட்டக்கடையில் உள்ள வஉசி சிலை, 1-ம் கேட் காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் என்.வி. ராஜேந்திர பூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, பக்கிள்புரத்தில் உள்ள காமராஜ் நினைவு நர்சரி பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய ஜோசப் தியேட்டர் அருகில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி எஸ்.பி. ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்ட செயலாளர் ஏ.கே.பாபு, மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணை தலைவர் வி.ராஜபெருமாள், துணை செயலாளர்கள் ஐ.ராஜேந்திரன், சாஸ்தாவு, இளைஞரணி நிர்வாகிகள் சுயம்புலிங்கம், சிம்பு முருகன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.