» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் சுதந்திர தின விழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:05:21 PM (IST)

தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் 76-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடியில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ் பர்னாந்து  முதலான தேசிய தலைவர்கள் சிலைகள் மற்றும் வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலை, மட்டக்கடையில் உள்ள வஉசி சிலை, 1-ம் கேட் காந்தி சிலைக்கு  மாவட்ட தலைவர் என்.வி. ராஜேந்திர பூபதி தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
         
முன்னதாக, பக்கிள்புரத்தில் உள்ள காமராஜ் நினைவு நர்சரி பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய ஜோசப் தியேட்டர் அருகில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி எஸ்.பி. ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
          
இந்நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்ட செயலாளர் ஏ.கே.பாபு, மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணை தலைவர் வி.ராஜபெருமாள், துணை செயலாளர்கள் ஐ.ராஜேந்திரன், சாஸ்தாவு, இளைஞரணி நிர்வாகிகள் சுயம்புலிங்கம், சிம்பு முருகன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory