» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இரத்த பரிசோதனை முகாம்
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 12:56:08 PM (IST)
தூத்துக்குடியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா நகரில் மாநகர செயற்குழு உறுப்பினர் முஹைதீன் அப்துல் காதர், ஜாஹிர் ஹுசைன் நகரில், மாநகர செயற்குழு உறுப்பினர் ஷேக் முஹைதீன் ஆகியோர் கொடியேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டு துறை சார்பில் ஜாகிர் உசேன் நகர் பள்ளி அருகில் நிஸ்வான் பெண்கள் மதரஸாவில் வைத்து இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமினை மாவட்ட சமூக மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் தமீன் அன்சார் ஒருங்கிணைத்து நடத்தினார். ஜாஹிர் ஹுசைன் நகர் பள்ளி செயலாளர் ஜனாப் கபூர்தீன் முகாமினை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மீனவரணி மாவட்ட தலைவர் கௌது மைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் ஜாஹிர் ஹுசைன் நகர் பள்ளி ஜமாத்தார்கள், பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனார்.