» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சுதந்திர தினவிழா!

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 12:26:39 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 76வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது 

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) இரா.சாந்தகுமார்  தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கரோனா நோய்தொற்று காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சியின் களப் பணியாளர்களான எட்வின்குமார் மற்றும்  சுகந்தி அவர்களின் திறம்பட செயலாற்றியதற்காகவும், தேசீய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்ற இக்கல்லூரியின் மாணவர்களையும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். 

75வது சுதந்திர ஆண்டை நினைவுகூறும் வகையில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகளின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமிட்டும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். உதவிப் பேராசிரியர் இரா.ஷாலினி, உதவி உடற்கல்வி இயக்குநர் த.நடராஜன்  மற்றும் விளையாட்டு செயலாளர்  பா. பார்த்திபன் ஆகியோர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory