» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொசுவர்த்தி பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் சாவு
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:44:01 AM (IST)
காயல்பட்டினத்தில் மதுபோதையில் கொசுவர்த்தி பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் முத்துசெல்வம் (32), இவர் சம்பவத்தன்று இரவு அங்குள்ள பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் படுத்து தூங்கினாராம். அப்போது கொசுவர்த்தியை பற்ற வைக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியதில் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.