» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொசுவர்த்தி பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் சாவு

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:44:01 AM (IST)

காயல்பட்டினத்தில் மதுபோதையில் கொசுவர்த்தி  பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் முத்துசெல்வம் (32), இவர் சம்பவத்தன்று இரவு அங்குள்ள பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் படுத்து தூங்கினாராம். அப்போது  கொசுவர்த்தியை பற்ற வைக்க முயன்றுள்ளார்.

அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியதில் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory