» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு: இளஞ்சிறார்கள் உட்பட 3பேர் கைது!

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:17:21 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 இளஞ்சிறார்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள  இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி மகன் அரியநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை இவர் துறைமுகம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 3பேர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அரியநாயகம் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் விரட்டிச் சென்று அவர்களை மூவரையும் வளைத்துபிடித்து தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செட்டிப்பெருமாள் மகன் முனீஸ்வரன் (25) மற்றும் 2 இளஞ்சிறார்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory