» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சுதந்திர 75வது தினவிழா கோலாகலம் : ரூ.83.39 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 10:47:39 AM (IST)



தூத்துக்குடியில் 75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை" முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ரூ.83.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா" தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பிரகாஷ் பாபு, ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர்  சந்தீஷ், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  பிரேமானந்தன் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 62 காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பின்னர் வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை உடபட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 138 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கெளரவித்தார். 



விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட அலுவலர் சரவணன், கலால் அலுவலர் செல்வநாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், டவுண் டிஎஸ்பி சத்யராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory