» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 75வது சுதந்திர தின விழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 9:53:46 AM (IST)
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா, வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராம மூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், வங்கியின் பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.