» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:27:59 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் வடக்கு ஓடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொண்டு உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தொலைதூர புயல் அறிவிப்பான 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. ஆனால் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory