» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொடர் விடுமுறை எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:24:49 AM (IST)

3 நாட்கள் தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று முன்தினம் மாலை முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவியத்தொடங்கினர். கார்கள், வேன்கள், பஸ்களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். 

நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்ததால் கடும் நெரிசல் காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் நிறைந்து காணப்பட்டது. எனவே பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதி, ரத வீதிகள், தெப்பக்குளம் பகுதி போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory