» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்- பெட்ரோல் குண்டு வீச்சு! - போலீசார் காயம்!

ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 6:18:50 PM (IST)

திருச்செந்தூர் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறை வாகனங்கள் உடைக்கப்பட்டது. போலீசார் காயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கரம்பவிளையில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை திருவிழா முளைப்பாரி ஊர்வலம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

அப்போது கரம்ப விளை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. ரத்தினம் என்பவரது மாட்டுத் தொழுவத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மாட்டுத் தொழுவம் சேதம் அடைந்தது. மேலும் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி.யின் பாதுகாவலர் பால்பாண்டி (27) ஆகியோர் கல்வீச்சில் காயம் அடைந்தனர். மேலும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. காவல் துறையினரின் இருசக்கர வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பத்தில் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் மாவட்ட போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 13 பேரை திருச்செந்தூா் கோயில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து

SaravanakumarAug 16, 2022 - 12:13:03 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் பனிமைய மாதா சர்ச் நடந்து சண்டை மட்டும் பதிவு செய்யாதது ஏன் ❓

King from tirunelveli .....middle class seemarajaAug 15, 2022 - 05:30:05 AM | Posted IP 162.1*****

ஆணவக்கொலை.யை தடுக்க பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை.யை பெயருக்கு திருமணம் முடித்துவிட்டு காதலை வாழவையுங்கள்.......உங்களது காதல் தெரிந்தும் கல்யாணம் செய்கிறான் என்றால் அவன் மானங்கட்ட மாப்பிள்ளை..தான்......அத்தகைய அடிமை கிடைத்தால் அது தங்களது பாக்கியம்.....இதற்கு மேல விளக்க மாத்தரு பூதம் வேணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory