» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி சார்பாக சுதந்திர தின அமுத பெருவிழா : தியாகிகளுக்கு மரியாதை
ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 6:06:00 PM (IST)
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பாக சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுதந்திர போராட்ட போராட்டத் தியாகிகளின் இல்லங்களுக்கு சென்று மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி 1 கேட் காந்தி சிலை முன்பு தொடங்கி ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் இல்லம், கவர்னகிரி சுந்தரலிங்கனார், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்திற்கு சென்று மலர் மரியாதை செய்யப்பட்ட்டது.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், இசக்கிமுத்து குமார், ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவேந்திரா, நாராயன் ராஜ், பலவேசம், ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் செல்வகணேஷ், மாரியப்பன், மண்டல பொறுப்பாளர்கள் சுதாகர், ஆறுமுகம், வெங்கடேஷ், கவி சண்முகம், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.