» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓசனூத்து கால்நடை மருந்தகம் அடிக்கல் நாட்டு விழா

ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 10:41:48 AM (IST)



ஓசனூத்து கால்நடை மருந்தகம் ரூ.48.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓசனூத்து பகுதியில் ரூ.48.35 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டப்பட உள்ளது. இதில் தரை தளத்தில் பணியாளர் அறை, மருந்துவைப்பறை, V.A.S இயந்திர அறை, பணியிடம், வெளிநோயாளிகள் பிரிவு, கழிப்பறை ஆகிய வசதிகள் அமைக்கப்படள்ளது. இப்பணிகளை மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்டம் தனிவட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை கோட்டப் பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், ஒன்றியகவுன்சிலர் மொட்டையசாமி, ஓசனூத்து ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory