» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது

ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 10:29:54 AM (IST)

கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த பல்வேறு நகை பறிப்பு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், போலீஸாா் அமல்ராஜ், பாண்டியராஜ், சரவணன் ஆகியோா் இளையரசனேந்தல் சாலையில் சித்திரம்பட்டி விலக்கருகே வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை விசாரித்தபோது, அவா்கள், சிவகாசி பராசக்தி காலனி மு.விஜயகுமாா் (32), அய்யனேரி காளியம்மன் கோயில் தெரு காா்த்திக் (19), நாலாட்டின்புத்தூா் மொட்டைமலை சிரஞ்சீவி (20) என்பதும், கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த பல்வேறு நகை பறிப்பு வழக்குகளில் தொடா்புடையோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, 7.5 பவுன் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory