» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் இருந்து தவறிவிழுந்து இளம்பெண் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:49:24 AM (IST)
தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் யோனஸ் இவரது மனைவி சகாய தன்யா (22) நேற்று கணவன் - மனைவி இருவரும் பைக்கில் மட்டகடையில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். குருஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை முன்பு செல்லும்போது சாலையில் இருந்த வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த சகாய தன்யா கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி: விஜய் வசந்த் எம்.பி இரங்கல்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:33:13 PM (IST)

கிராம சபை கூட்டத்தில் 80 தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி சமுதாய புரட்சி: ஆட்சியர் தகவல்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:28:34 PM (IST)

நாலுமாவடியில் சிறுவர் எழுப்புதல் முகாம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:18:12 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டு தார் சாலை எங்கே? அமமுக கேள்வி!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:20:22 PM (IST)

கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன்
திங்கள் 2, அக்டோபர் 2023 4:56:15 PM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)

சாமான்யன்Aug 10, 2022 - 03:25:20 PM | Posted IP 162.1*****