» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் 301 திருவிளக்கு பூஜை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:32:11 PM (IST)
தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் மழை வளம், மனித நேயம், தொழில் வளம் பெருகவும், கரோனா நோய் விலகி மக்கள் நலமுடன் வாழ வேண்டி 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.