» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தம்பதியரை அரிவாளால் வெட்டி 2½ பவுன் நகைபறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 6, ஆகஸ்ட் 2022 11:14:12 AM (IST)
கோவில்பட்டியில் கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி 2½ பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சொரிமுத்து மகன் பரமசிவன் (67). பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி (60) நேற்று இரவு 8 மணியளவில் கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் சாலையில் நடந்து வந்தபோது ஒரே பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், தம்பதியரை அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுதாதேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதி தேர்தல் அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்பமனு அளித்தனர்.
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:18:32 AM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:28:51 AM (IST)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:00:52 AM (IST)

ரஜினிகாந்த் 30 ஆண்டாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிவருகிறார்: கடம்பூர் ராஜு கிண்டல் !
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:11 PM (IST)

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் 301 திருவிளக்கு பூஜை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:32:11 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்: 320பேர் கைது
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:20:30 PM (IST)
