» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை : மேலும் 3பேருக்கு வெட்டு - மர்ம கும்பல் வெறிச்செயல்!
சனி 6, ஆகஸ்ட் 2022 10:44:15 AM (IST)
தூத்துக்குடியில் ஓசியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், புரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் கருப்பசாமி, இவர் தூத்துக்குடி 3வது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்த 3பேர் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதையடுத்து கடையின் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வரும் முடிவைத்தானேந்தல், ஓதுவார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பொன் செந்தில் முருகன் (31) உட்பட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்து கடை ஊழியர்களான பொன்செந்தில் முருகன், மற்றும் திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ்மில் தெரு முருகேசன் மகன் சாமுவேல் (37), அப்பகுதியில் பால்பூத் நடத்தி வரும் பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனி முருகன் (55) ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செந்தில் முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் வழக்குப்பதிந்து, 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த தவசி பெருமாள் மகன் கற்குவேல் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மக்கள்Aug 6, 2022 - 01:42:42 PM | Posted IP 162.1*****
என்கவுண்டர் தான் சரியான தீர்வு
முத்துநகர் முத்துAug 6, 2022 - 01:19:20 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி மாநகர் முழுவதும் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது காவல்துறையும் எவ்வளவு நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற நிலையில் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது இதனால் விளையும் விளைவுகள் தான் இது
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக்கில் இருந்து தவறிவிழுந்து பெண் பரிதாப சாவு
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:49:24 AM (IST)

சிறுமியை கடத்திய வாலிபர் : போலீஸ் விசாரணை!
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:33:57 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்ப மனுக்கள் அளிப்பு!
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:18:32 AM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:28:51 AM (IST)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:00:52 AM (IST)

ரஜினிகாந்த் 30 ஆண்டாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிவருகிறார்: கடம்பூர் ராஜு கிண்டல் !
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:11 PM (IST)

தமிழன்Aug 6, 2022 - 06:07:07 PM | Posted IP 162.1*****