» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான இன்ஜினியர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:56:40 AM (IST)
ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் கைதான குமரியை சேர்ந்த இன்ஜினியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளன. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் துரித நடவடிக்கை எடுப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இத்தகைய மோசடிகள் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் மலேசியா நாட்டை தலைமையிடமாக கொண்டு மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் தலைமையில் ஒரு கும்பல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை என ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பித்த ஏராளமானோரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அந்த கும்பல் ஏராளமாக செல்போன் சிம்கார்டு எண்களையும் உபயோகித்துள்ளனர்.
இந்த மோசடியில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இன்ஜினியர் பிரின்ஸ் ஜெரோம் (30) என்பவருக்கு தொடர்பு இருப்பதை மும்பை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் பிரின்ஸ் ஜெரோம் சொந்த ஊரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மும்பை சைபர் கிரைம் போலீசார் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் பூதப்பாண்டி போலீசாரின் உதவியுடன் வீட்டில் வைத்து பிரின்ஸ் ஜெரோமை கைது செய்தனர்.
பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிரின்ஸ் ஜெரோமிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
