» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரியில் பேராசிரியருக்கு அடி-உதை: மாணவர்கள் 2பேர் சஸ்பெண்ட்!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:32:02 AM (IST)
கோவில்பட்டியில் அரசு கலை - அறிவியல் கல்லூரியில், கணிதத்துறை தலைவரான பேராசிரியரை மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்தபோது 4 மாணவர்கள் தன்னை தாக்கியதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் 4 மாணவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையேபேராசிரியர் சிவசங்கரன் கோவில்பட்டி அரசு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 2 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. இதேபோல் பேராசிரியர் சிவசங்கரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கல்லூரியில் பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
