» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.25கோடி கஞ்சா பறிமுதல் : டிரைவர் கைது
சனி 16, ஜூலை 2022 8:19:53 AM (IST)

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், தவமணி, தர்மராஜ் தலைமையிலான போலீசார் 4 பிரிவுகளாக பிரிந்து கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள சுனாமி காலனி கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஒரு கார் அதனை தொடர்ந்து ஒரு லாரி வந்தது.
போலீசார் அதனை மறிக்க முயன்றனர். ஆனால் அந்த வாகனம் போலீசாரை பார்த்ததும் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசார் அதனை விரட்டி சென்றனர். அப்போது சினிமா காட்சியை போல் கார் மற்றும் லாரி அருகே உள்ள உப்பளத்தில் இறங்கி சென்றது. போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். எனினும் காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். லாரியை சோதனையிட்ட போது அதில் 450 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த ஆண்டிசெல்வம் என்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பின்னர் மதுரையில் இருந்து லாரி மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு அதனை கடத்தி செல்ல உட்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் அதனை கடத்தி வரப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி சென்ற காரில் வந்தவர்கள் யார்? இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
