» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)
தட்டார்மடம் அருகே திருமணமாகி 7மாதத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பானுமதி (20). இவருக்கு கடந்த 7மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு போனார் என தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை வெள்ளிமலை தட்டார்மடம் அளித்துளள புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பௌலோஸ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.