» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்

சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

தட்டார்மடம் அருகே திருமணமாகி 7மாதத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார்  தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்  அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பானுமதி (20). இவருக்கு கடந்த 7மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு போனார் என தெரியவில்லை. 

இதுகுறித்து அவரது தந்தை வெள்ளிமலை தட்டார்மடம்  அளித்துளள புகாரின் பேரில்   காவல் ஆய்வாளர்  பௌலோஸ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory