» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)
சாத்தான்குளம் அருகே காலிமனை இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்பு வேலியை சேதப்படுத்தியதாக தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணறு வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சேவியர்ராஜ் மனைவி ஜெயக்கனி (65). அதேபகுதி ஒத்தவீடு சென்னிவீரன்தட்டு பகுதியைசேர்ந்த பெருமாள் மனைவி மாடத்தி(50). இவர்களுக்கு சொந்தமான காலிமனை, சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் பெந்தேகொஸ்தசபை பகுதியில் உள்ளது. இதனிடையே காலிமனை இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்புவேலி அமைப்பது தொடர்பாக இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்புவேலி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜெயக்கனி அளித்த புகாரின் பேரில் மாடத்தி மற்றும் அவரது மகன் மாடசாமி ஆகியோர் மீது சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்தார். இதுபோல் மாடத்தி அளித்த புகாரின் பேரில் ஜெயக்கனியின் மகன் டேவிட்சன்பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.