» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!

சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)



நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் புது வாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில்  நாச ரேத் மெயின் ரோட்டில் புது வாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூலை 7ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகிக்கிறார். 

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன், பி.கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புது வாழ்வு சங்க செயலாளர் டாக்டர் அன்புராஜன் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory