» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் மாயம்
சனி 2, ஜூலை 2022 3:17:38 PM (IST)
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையா புரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தெர்மல் அனல்மின் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு காளீஸ்வரி (21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவர் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கணவரை பிரிந்து காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் இருந்த காளீஸ்வரி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாய் காளியம்மாள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)

PERIAVAR VAAKKU.Jul 2, 2022 - 03:37:53 PM | Posted IP 162.1*****