» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ! - தூத்துக்குடியில் பரபரப்பு!!
சனி 2, ஜூலை 2022 10:20:35 AM (IST)
தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் பாளை., ரோட்டில் ஏவிஎம் மருத்துவமனை அருகில் அரசு ஊழியர் சங்கம் முன்பாக உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென தீப்பொறி கிளம்பியது. சில நொடிகளில் அது பெரும் தீயாக மாறி, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் தீயணைப்புத்துறை மற்றும் மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து நிகழ்ந்த பகுதி அருகே மார்க்கெட், மருத்துவமனை வணிக வளாகங்கள் உள்ளன. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் நிகழ்ந்துள்ள இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.