» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ! - தூத்துக்குடியில் பரபரப்பு!!

சனி 2, ஜூலை 2022 10:20:35 AM (IST)



தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.

தூத்துக்குடியில் பாளை., ரோட்டில் ஏவிஎம் மருத்துவமனை அருகில் அரசு ஊழியர் சங்கம் முன்பாக உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென தீப்பொறி கிளம்பியது. சில நொடிகளில் அது பெரும் தீயாக மாறி, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் தீயணைப்புத்துறை மற்றும் மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து நிகழ்ந்த பகுதி அருகே மார்க்கெட், மருத்துவமனை வணிக வளாகங்கள் உள்ளன. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் நிகழ்ந்துள்ள இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory