» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் பரிதாப சாவு!

வியாழன் 23, ஜூன் 2022 10:23:00 AM (IST)

ஆறுமுகநேரியில் மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துவேல் சுடலையாண்டி (21). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory