» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் காயம் : எஸ்பி மீட்பு பணி; சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்!
புதன் 22, ஜூன் 2022 4:43:28 PM (IST)

தூத்துக்குடியில் கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் காயம் அடைந்தனர். அவர்களை எஸ்பி பாலாஜி சரவணன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) மற்றும் கார் ஓட்டுநரான மதுரை காளவாசல் ஜாபர் அலி மகன் சுல்தான் (39)ஆகியோர் காரில் மதுரையிலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கார் தூத்துக்குடி துறைமுக சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயனம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
