» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் 23ம் தேதி மின்தடை
செவ்வாய் 21, ஜூன் 2022 8:59:14 PM (IST)
தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் வருகிற 23ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலையாபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட எல்லை நாயக்கன்பட்டி, ராமநாதபுரம், பத்மநாபமங்கலம் குவாரி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட வைப்பார் உப்பளம் பகுதியிலும்,
சாயர்புரம் மின் விநியோகப் பிரிவுக்க உட்பட்ட இருவப்பபுரம், சோலை புதூர் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட கோவங்காடு உப்பளம் பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
