» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் மணம் புரிந்த பெண் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்
வெள்ளி 20, மே 2022 10:33:42 AM (IST)
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்துகிருஷ்ணா புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா, இவரது மனைவி பபிதா (36). இந்த தம்பதியர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மன வேதனையடைந்த பபிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.