» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன் விரோதத்தில் 2 பைக்குகள் தீவைத்து எரிப்பு - போலீஸ் விசாரணை.!

வெள்ளி 20, மே 2022 10:27:57 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே முன் விரோதத்தில் 2 பைக்குகளுக்கு தீவைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாடிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சக்திவேல் (47). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் இடத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்காக ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கொடுத்து வந்தாராம். இந்த நிலையில் அவர் சரியாக பணம் கொடுக்காததால் பாலா அந்த இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த டேவிட் மகன் நடராஜன் (39) என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டாராம்.

இதனால் சக்திவேல் அந்த இடத்தில் வைத்து இருந்த மோட்டார் பம்ப் எனக்கு சொந்தமானது என்று அந்த மோட்டார் பம்பை கேட்டாராம். ஆனால் நடராஜன் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் நேற்று அதிகாலை நடராஜன் வீட்டுக்கு சென்று, அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் பைக்குகளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டாராம். இதில் 2 பைக்குகளும் தீயில் எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு ரூ.1.20லட்சம் ஆகும். இதுகுறித்து நடராஜன் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory