» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி : ரவுடி கைது!

வெள்ளி 20, மே 2022 10:16:14 AM (IST)

கோவில்பட்டியில் அரிவாளை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது மந்திந்தோப்பு பகுதி அருகே சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துகாளை (24) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி பணம் மற்றும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துகாளை மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு, கிழக்கு மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory