» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் சற்று குறைந்து குளிக்க தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த வாரம் விழா பெய்த கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது இதனை அடுத்து உற்சாகத்துடன் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. 

அருவியில் விழுந்த தண்ணீரில் கற்கள், மரக்கட்டைகள் அடித்து வரப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அருவிக்குச் செல்லும் வழியில் பேரிக்காட் மற்றும் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப்பயணிகள் சாரல் மழையில் நனைந்து கொண்டே அருவியை ஏக்கத்துடன் பார்த்து சென்றனர். மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் குளிக்க தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து உற்சாகமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory