» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா வெள்ளாடுகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வழங்கினார்.
ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் {ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம்} 1200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.2.40 கோடி செலவில் 100% மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 6000 வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது.
இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 82 ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள்/கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் வீதம் இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் பயனாளிகளிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் சிறந்த முறையில் அரசால் வழங்கப்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து ஆடுகளைப் பெருக்கி தொழில் முனைவோராக பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு அரசால் இலவசமாக காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்றும் கொட்டகை கட்டும் வகைக்கு பயனாளிகள் ஒவ்வொருக்கும் ரூ.1000 வீதம் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக பயனாளிகளுக்கு சிறந்த முறையில் ஆடுகளை வளர்க்க கால்நடை பராமரிப்புத்துறையால் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், இணை இயக்குநர் கால்நடை ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Meenakshiமே 18, 2022 - 10:25:07 PM | Posted IP 162.1*****