» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றுக்குள் தவறி விழுந்து போதை ஆசாமி சாவு!
செவ்வாய் 17, மே 2022 10:20:28 AM (IST)
திருச்செந்தூரில் மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் காந்தி (45). இவர் ஆவுடையார் படத்தில் உள்ள ஒரு கிணறு மேல் உட்கார்ந்து மதுபானம் அருந்தினாராம். அப்போது போதை அதிகமாகவே நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழன்மே 17, 2022 - 11:13:16 AM | Posted IP 162.1*****