» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கலசத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தின் மீது நேற்று இரவு மா்ம நபா் ஏறி கலசத்தின் அருகே நின்றிருப்பது பக்தா்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூா் தீயணைப்பு மீட்புப் படை அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையில் மீட்புப் படையினா் வந்து ராஜகோபுரத்தின் உள்பகுதி படிகள் வழியாக மேல்பகுதிக்கு சென்று,
அங்கு கலசத்தின் அருகே அமா்ந்து இருந்த நபரிடம் பேசி பத்திரமாக அவரை மீட்டு கீழே இறங்கினா். பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூா் முருகேசன் மகன் முத்து(24) என தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், தான் சிற்ப வேலைக்கு செல்வதாகவும், பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தாா். மேலும், திருச்செந்தூா் ராஜகோபுரத்தின் சிற்பங்கள் பெயிண்ட் மற்றும் பாலீஷ் செய்யாமல் இருப்பதால் அதை பாா்ப்பதற்காக மேலே ஏறிச் சென்றதாக தெரிவித்தாா். அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
Kumarமே 17, 2022 - 09:01:23 AM | Posted IP 162.1*****