» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!
வெள்ளி 13, மே 2022 12:22:11 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள் அருகேயுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் மில்லர்புரம், திருச்செந்தூர் ரோடு, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, கடை உரிமையாளர்களிடம் பள்ளி - கல்லூரி அமைந்துள்ள 100மீ தூரத்திற்கு சிகரெட் விற்க கூடாது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல்வைக்கப்படும் என்று அறிவுறுத்தினர். மேலும் கடைகளில் இருந்த சிகெரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பர அட்டைகளை அப்புறப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
