» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!
வெள்ளி 13, மே 2022 12:22:11 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள் அருகேயுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் மில்லர்புரம், திருச்செந்தூர் ரோடு, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, கடை உரிமையாளர்களிடம் பள்ளி - கல்லூரி அமைந்துள்ள 100மீ தூரத்திற்கு சிகரெட் விற்க கூடாது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல்வைக்கப்படும் என்று அறிவுறுத்தினர். மேலும் கடைகளில் இருந்த சிகெரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பர அட்டைகளை அப்புறப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
சனி 3, ஜூன் 2023 10:43:40 AM (IST)
