» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
வெள்ளி 13, மே 2022 12:11:04 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக அரசின் "ஒய்வறியா உழைப்பின் ஓராண்டு” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

ஓய்வறியா உழைப்பின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சட்டமன்ற தொகுதிகள்தோறும் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்ற கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட கீழ்க்கண்ட தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அனைத்து பொதுக்கூட்டங்களிலும் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்க் கழகச் செயலாளா்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளர்கள் விபரம் :
17.05.2022 செவ்வாய்கிழமை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி காந்தி மைதானம் (பேச்சாளர்கள்: பவானி கண்ணன், தமிழ் கொண்டான்)
21.05.2022 சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சிதம்பரநகா் பேரூந்து நிறுத்தம் எதிரில், தூத்துக்குடி (பேச்சாளர்கள்: மன்னை இளங்கோவன், பவித்திரம் கண்ணன், சரத்பாலா)
22.05.2022 ஞாயிற்றுகிழமை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம், மதுரை மெயின் ரோடு, விளாத்திகுளம் (பேச்சாளர்கள்: ஆரணி மாலா, முகவை இராமா், சரத்பாலா)
மக்கள் கருத்து
P.S. Rajமே 13, 2022 - 08:26:16 PM | Posted IP 162.1*****
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தூ.டி நகர மேம்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும். சாலை போக்குவரத்தை சீர்படுத்தி'one-way' யை ஒழுங்குபடுத்த வேண்டும். முதலில் நம்ம ஊரை கவனியுங்க!
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)

P.S. RAJ அவர்களேமே 14, 2022 - 02:40:11 PM | Posted IP 162.1*****