» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி: தந்தை கைது!
சனி 22, ஜனவரி 2022 11:00:07 AM (IST)
ஏரல் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள இடையர்காடு கிராமம், சம்படி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஐயப்பன் (42). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (32). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. செல்வநரேஷ் (11), முருகவேல் (9), செல்வ கணேஷ் (6) என மூன்று மகன்கள் உள்ளனர். ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தகராறு செய்வாராம். இதுபோல் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ரேகா, அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையறிந்த ரேகா தனது மூன்று குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கொலை முயற்சி வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
