» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கபடி விளையாட்டில் காயமடைந்தவர் திடீர் மரணம்!
வெள்ளி 21, ஜனவரி 2022 8:39:20 PM (IST)
தூத்துக்குடியில் கபடி விளையாட்டில் காயமடைந்த வாலிபர் திடீரென உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிள்ளையன் மனை வக்கூரைச் சேர்ந்தவர் சடையவீரன் மகன் மூக்கன் (37). தொழிலாளியான இவருக்கு மனைவி இசக்கியம்மாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி அதே ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் மூக்கன் பங்கேற்று விளையாடினாராம். அப்போது வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து மூக்கன் அண்ணன் மாரிமுத்து நாசரேத் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்கு பதிந்து விசாரணைை நடத்தி வருகிறார். விளையாட்டில் ஏற்பட்ட காயம் குடற்பகுதியில் உள்காயமாக இருந்ததால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
