» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடற்கரையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை
திங்கள் 6, டிசம்பர் 2021 8:04:40 AM (IST)
தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இல்லம், வடபாகம் காவல் நிலையம் அருகேயுள்ள சிந்தா மாதா கோயில் கடற்கரைப் பகுதியில் நேற்று அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முகம் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.