» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் சிக்கியவர்களுக்கு எம்எல்ஏ உதவி!
ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:05:30 PM (IST)
கருங்குளத்தில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றிய பகுதியில் மழை சேதங்களை பார்வையிட இன்று காலை ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்தராஜ் காரில் கருங்குளம் காமராஜர் தெரு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு குடும்பத்தினர் கருங்குளம் சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வாகனத்துக்குள் எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே பாய்நதது. இதனால் நிலை தடுமாறிய அந்த குடும்பத்தினர் குடும்பத்துடன் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானர்கள்.
அவர்கள சாலையில் விழுந்து கிடப்பதை கண்ட எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் காரை விட்டு கீழே இறங்கினார். அவர்களை மீட்டு, அவருடன் வந்த கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேகர் என்ற சேதுராமலிங்கம் அவர்கள் காரில் ஏற்றி அருகில் உள்ள கருங்குளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு பேசினார். அதன் பின் அவர் மழை வெள்ளத்தினை பார்வையிட கிளம்பினார். உடனே ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மைதிலி ஆகியோர் உடன் வந்தனர்.