» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனமழை : தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
ஞாயிறு 28, நவம்பர் 2021 3:24:45 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நவ.29) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை (நவ.29) திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.