» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வெள்ள நீரை அகற்ற கோரி மக்கள் சாலை
ஞாயிறு 28, நவம்பர் 2021 2:09:05 PM (IST)
தூத்துக்குடியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளிலை தேங்கிய வெள்ள நீரை அகற்ற கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ரோடுகளில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளில் தங்க முடியாதவர்கள், விடிய, விடிய துக்கமின்றி தவித்தனர். இந்நிலையில் வெள்ள நீரை அகற்றக்கோரி முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ShnamugarajNov 28, 2021 - 02:53:45 PM | Posted IP 173.2*****