» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உதயநிதி பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கல்

சனி 27, நவம்பர் 2021 10:00:26 PM (IST)



ஆத்தூரில்  திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.  

தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக இளைஞரணி சார்பில்  உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆத்தூர் வீரவாகு மஹாலில் வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆயிரம் நபர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மேலாத்தூர் பஞ்சாயத் தலைவர் சதீஷ்குமார், ஆத்தூர் நகர திமுக செயலாளர் முருகப்பெருமாள், புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவர் சோபியா, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம்,ஆழ்வை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் பல கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணி நிர்வாகிகள் உடன்‌ இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory