» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வான பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகாவுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!
செவ்வாய் 26, அக்டோபர் 2021 12:05:56 PM (IST)
ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட இளம் பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா, கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக வார்டுகள் கொண்டது மானூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக 22 வயது இளம் பொறியியல் பட்டதாரியான ஸ்ரீலேகா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை அன்பழகன் மானூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலேகா, இன்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.