» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் வாலிபர் கைது!
சனி 25, செப்டம்பர் 2021 11:28:52 AM (IST)
விளாத்திகுளம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24). இவர் 15 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார்.